Saturday 3 May, 2008

இனிய சம்பவம்

என் பணியின் பொருட்டு நிதமும் ஒரு மணி நேரப்பயணம் மேற்க்கொள்வது வழக்கம். பயண அலுப்பை தவிர்க்க ஹெட்செட்டில் பாடல் கேட்டுக்கொண்டே செல்வேன்.அன்றும் அதே போல்தான் பயணம்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி.எனைப்பார்த்தும் சிலர் புன்னகை கூட புரிந்தார்கள்.என் அருகில் இருந்த ஒரு பெண்மணியும் எனைப்பார்த்து புன்னகை செய்தாள். எனக்கு ஒரே ஆச்சரியம் .இன்று எதாவது நல்ல நாளாய் இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே பயணம் செய்தேன்.சரி எதற்கும் நம் உடன் பணிபுரிபவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று,ஹெட்செட்டை கலட்டிககொண்டே பேருந்தை விட்டு கிழே இறங்கினேன்.இறங்கியவுடந்தான் அனைவரின் மகிழ்வுற்க்கு காரணம் புரிந்தது. செல்லில் இன்னும் பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.